Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 8, 2013

ஆடை அவிழ்ப்பும் அரசியல் ஆதாயமும்!?

லக்னோ: ஆடை அவிழ்ப்பதை கூட அரசியலாக்கும் இந்த அரசியல் அசிங்கங்கள் அடுத்து இவரை இந்திய உயர்ந்த பதவியான பிரமர் பதவியை இவருக்கு கிடைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவர்களே சிந்திப்பீர்.

அடுத்த வாரம் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியலை கலந்தால் தடுப்போம் என்று சமாஜ்வாதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுக் குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் குஷவாஹா கூறியது:

“ஆன்மீகமும், மதரீதியான நிகழ்ச்சிதான் மகா கும்பமேளா. மோடி புண்ணியஸ்நானம்(?) செய்து சன்னியாசிகளின் ஆசியை வாங்கிவிட்டு செல்லலாம். ஆனால், மதத்தின் பெயரால் அரசியலை இலக்காக கொண்டால் மோடியை தடுப்போம். கும்பமேளா நடைபெறும் இடம் மதரீதியான ஸ்தலமாகும். அது அவ்வாறே தொடரட்டும். இது உபதேசமும், வேண்டுகோளுமாகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அசிங்கங்களையும் அனாச்சாரங்களையும் ஆன்மிக போர்வையில் செய்கிறார்கள், அதிலும் பெண்கள், குழந்தைகள் முன்பு என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

1 comments :

2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலையில் தொடர்புடைய நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய குல்பர் சொசைட்டி கூட்டுப் படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!